Tuesday, August 19, 2014

அவள் -6


30.
எப்படிக் கொண்டாடுவது
உன் பிறந்த நாளை,
தினமும் அல்லவா
பிறந்து கொண்டிருக்கிறாய் நீ
என் மனதில்!

31.
உன்னிடம்
அறிந்து கொண்டேன்
சின்ன எழுத்து அழகுக்கும்
பெரிய எழுத்து அழகுக்குமான
வித்தியாசம்.

32
உன்
அழகுக்கில்லை
கடந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
என்று தனியே.

33.
பளிச்சிடுகிறது
உன் முகம்
அதில்
பிரதிபலிக்கிறது
என் மனம்.

34.
தள்ளிச் செல்லச் செல்ல
என் மிக அருகாமையில்
நீ.

35.
சற்றே திரும்பிப் பார்
தத்தித் தத்தி உன் பின்னால்
நடந்து வருகிறது
என் இதயம்.

36.
உன் எண்ணங்களும்
என் எண்ணங்களும்
கை கோர்த்தபடி
நம் முன்னால்!

><><><>< 
(படம்- நன்றி:கூகிள்)


3 comments:

இராஜராஜேஸ்வரி said...

அவள் பிறந்தநாள் ..
இனிமை சேர்க்கிறது..!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

இதயங்களை திருடும் கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

எல்லாமே அருமை.

32. வயதோடு வந்தாலும் காதல். அது வயதாகி வந்தாலும் காதல்!

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!