Friday, May 2, 2014

அவள்...

 

1.

உனக்குள்
எனையெண்ணி
நீ
உதிர்க்கும் புன்னகை
உயிர்ப்பிக்கும்
என்னை.
><><

2.

எப்போதும் என்னை
நினைப்பதில்லை
என்று
சொல்லிக் கொண்டிருக்கிறாய்
எப்போதும்!
><><

3.

அழகு,
மிக அழகு,
ஆகச் சிறந்த அழகு,
அப்புறம்
நீ.
><><

4.

சிரித்துக் கொண்டிருப்பதே
உன் உதடுகளின்
இயல் நிலை
என்பது
எப்போதாவது
அது மாறும்போது அறிகிறேன்.
><><

5.

நீ
வரும்போது
நான் இருந்தேன்,
நீ
செல்லும்போது
நான் இல்லை.

><<<>>><



 

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

இராஜராஜேஸ்வரி said...

அழகான வரிகள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை....

ராஜி said...

நீ
செல்லும்போது
நான் இல்லை
>>
அவங்களோடவே போயாச்சோ!!

thendralsaravanan said...

அவள்....அழகு கவிதை!

cheena (சீனா) said...

அன்பின் ஜனா - அருமையான சிந்தனை - அவள் பற்றிய கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமை - அவளைப் போலவே!

கோமதி அரசு said...

அனைத்தும் அருமை.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!